Search This Blog

Monday, July 30, 2018

அங்காரஹ சதுர்த்தி

அங்காரஹ சதுர்த்தி

வேழமுகத்து விநாயகனுக்கு
விக்னங்களைத் தீர்ப்போனுக்கு
வேண்டும் வரம் தருவோனுக்கு
அங்காரஹ சதுர்த்தி..

கணங்களின் நாதனுக்கு
கயிலையின் ஜ்யேஷ்டனுக்கு
கவலையெல்லாம் தீர்ப்போனுக்கு
அங்காரஹ சதுர்த்தி..

பக்தி சிரத்தையுடன்
பால் தயிர் பஞ்சாமிர்தம்
பாங்குடனே அபிஷேகத்துடன்
அங்காரஹ சதுர்த்தி..

புஷ்ப மாலைகளால் பூசனையும்
மந்திரங்களால் அர்ச்சனையும்
மனமுருகி செய்திட மகிழ்ந்திடும்
அங்காரஹ சதுர்த்தி..

ஆலயம் சென்று ஆனைமுகனை
தோப்புக்கரணமிட்டு துதித்திட
எடுத்த காரியம் ஜெயமாக்கிடும்
அங்காரஹ சதுர்த்தி..

ஸ்ரீமத் ஜடா விநாயக மூர்த்திகி ஜெய்

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
31.07.18

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...