அங்காரஹ சதுர்த்தி
வேழமுகத்து விநாயகனுக்கு
விக்னங்களைத் தீர்ப்போனுக்கு
வேண்டும் வரம் தருவோனுக்கு
அங்காரஹ சதுர்த்தி..
கணங்களின் நாதனுக்கு
கயிலையின் ஜ்யேஷ்டனுக்கு
கவலையெல்லாம் தீர்ப்போனுக்கு
அங்காரஹ சதுர்த்தி..
பக்தி சிரத்தையுடன்
பால் தயிர் பஞ்சாமிர்தம்
பாங்குடனே அபிஷேகத்துடன்
அங்காரஹ சதுர்த்தி..
புஷ்ப மாலைகளால் பூசனையும்
மந்திரங்களால் அர்ச்சனையும்
மனமுருகி செய்திட மகிழ்ந்திடும்
அங்காரஹ சதுர்த்தி..
ஆலயம் சென்று ஆனைமுகனை
தோப்புக்கரணமிட்டு துதித்திட
எடுத்த காரியம் ஜெயமாக்கிடும்
அங்காரஹ சதுர்த்தி..
ஸ்ரீமத் ஜடா விநாயக மூர்த்திகி ஜெய்
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
31.07.18
No comments:
Post a Comment