Search This Blog

Saturday, July 28, 2018

ஜடா விநாயகா

ஜடா விநாயகா

கும்மென்ற கணபதி
கம்பீர கணபதி காணக்
காண கவர்ந்திழுக்கும்
கலையான கணபதி..

கும்பாபிஷேகம் கண்ட
குருவைய்யர் கணபதி
குறையாவும் தீர்த்தருளும்
குறுமுனியின் கணபதி..

ஆனைமுக கணபதி
அழகான கணபதி
அனைவரும் பூஜிக்கும்
அக்ரஹார கணபதி..

அலங்காரம் செய்திட
அசத்தலான கணபதி
அடியாரை ஆட்கொளும்
அம்சமான கணபதி..

விபூதி காப்பும் செய்ய
வரமருளும் கணபதி
வெண்ணை சார்த்திட
உருகி விடும் கணபதி..

சந்தன காப்பும் செய்ய
சந்தோஷிக்கும் கணபதி
சத்தியமாய் அனைவர்க்கும்
சுகமளிக்கும் கணபதி..

ஜென்மம் எடுத்தமைக்கு
சிதம்பரம் வந்திடுவோம்
ஸ்ரீமத் ஜடா விநாயகரின்
பாதம் பணிந்திடுவோம்..

ஜடா விநாயக மூர்த்திகி ஜெய் !!

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
28.07.18

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...