பள்ளி தோழமை
பள்ளி நாட்களை சற்றே
திரும்பி பார்க்க வைத்த
என் நண்பர்களே
கலகலப்பாக குறுஞ்செய்தி
போட்டு கவனத்தையெல்லாம்
பின்நோக்க வைத்தீர்
இரண்டல்ல மூன்றல்ல
இருபத்தெட்டு வருடங்கள்
இன்றோடு சேர்த்து
ஒருதலைமுறை தாண்டிய
பயணத்தை நினைக்கையில்
நெஞ்சம் சிலிர்க்கிறது
பள்ளி நாட்களை சற்றே
அசைபோட்டு காண்கையில்
கண்ணீர் கசிகின்றது
நம்மில் எல்லோரும்
நாற்பது வயதை கடந்த
குடும்பஸ்தர்களே
உத்யோக நிமித்தம்
சிதம்பரத்தைப் பிரிந்து
சிதறிப் போயுள்ளோம்
திருமணமாகி பின்னர்
புதுஉறவோடு சேர்ந்து
பயணம் கொண்டுள்ளோம்
சவால்களை எதிர்நோக்கி
பயணிக்கும் நொடியாவும்
பிரமிக்க வைக்கின்றது
வாழ்வின் யதார்த்தத்தை
நினைத்து பார்க்கையில்
நெஞ்சம் புடைக்கின்றது
கழிந்த நொடியென்றும்
கால சுழற்சியில் மீண்டு
திரும்ப வருவதில்லை
பெற்றோர் வளர்ப்பினிலே
பாசத்துடன் வளர்ந்தவர்கள்
பெற்றோராய் ஆவதுண்டு
பணத்தின் அருமையினை
எண்ணி செலவிட்டு பின்
ஏங்கித் தவிப்பதுண்டு
கடமையை ஆற்றுவோம்
குடும்பத்தை போற்றுவோம்
நன்நட்பினையும் பேணுவோம்
வாழ்க வளர்க 💐💐💐💐
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
05.07.18
No comments:
Post a Comment