Search This Blog

Thursday, July 5, 2018

பள்ளி தோழமை

பள்ளி தோழமை

பள்ளி நாட்களை சற்றே
திரும்பி பார்க்க வைத்த
என் நண்பர்களே

கலகலப்பாக குறுஞ்செய்தி
போட்டு கவனத்தையெல்லாம்
பின்நோக்க வைத்தீர்

இரண்டல்ல மூன்றல்ல
இருபத்தெட்டு வருடங்கள்
இன்றோடு சேர்த்து

ஒருதலைமுறை தாண்டிய
பயணத்தை நினைக்கையில்
நெஞ்சம் சிலிர்க்கிறது

பள்ளி நாட்களை சற்றே
அசைபோட்டு காண்கையில்
கண்ணீர் கசிகின்றது

நம்மில் எல்லோரும்
நாற்பது வயதை கடந்த
குடும்பஸ்தர்களே

உத்யோக நிமித்தம்
சிதம்பரத்தைப் பிரிந்து
சிதறிப் போயுள்ளோம்

திருமணமாகி பின்னர்
புதுஉறவோடு சேர்ந்து
பயணம் கொண்டுள்ளோம்

சவால்களை எதிர்நோக்கி
பயணிக்கும் நொடியாவும்
பிரமிக்க வைக்கின்றது

வாழ்வின் யதார்த்தத்தை
நினைத்து பார்க்கையில்
நெஞ்சம் புடைக்கின்றது

கழிந்த நொடியென்றும்
கால சுழற்சியில் மீண்டு
திரும்ப வருவதில்லை

பெற்றோர் வளர்ப்பினிலே
பாசத்துடன் வளர்ந்தவர்கள்
பெற்றோராய் ஆவதுண்டு

பணத்தின் அருமையினை
எண்ணி செலவிட்டு பின்
ஏங்கித் தவிப்பதுண்டு

கடமையை ஆற்றுவோம்
குடும்பத்தை போற்றுவோம்
நன்நட்பினையும் பேணுவோம்

வாழ்க வளர்க 💐💐💐💐

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
05.07.18

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...