Search This Blog

Friday, July 6, 2018

மதிய உறக்கம்

மதிய உறக்கம்
மனதை கிறக்கும்

வயிறு முட்ட உண்டு
வெற்றிலை பாக்கிட்டு
தலைமாட்டில் கைவைத்து
சற்றே சாய்ந்திடனும்

கண்ணயர்ந்து நாமும்
துயில் கொண்டிடவே
சாயந்திர நேரம் வருவது
சத்தியமாய் தெரியாது

படுத்தெழுந்த பின்னே
பில்டர் காபி அருந்த
பிறவிப் பயன் கிட்டும்
பேரானந்தம் எட்டும்

வெள்ளிக் கிழமையிலே
வாரக்கடைசியினை
வரவேற்க காத்திருக்கும்
உற்சாக மனிதன் நான்

சுவையான உணவும்
சரியான உறக்கமும்
அமைந்தால் அதுவே
அமரலோகம் என்பேன்

மட்டற்ற மகிழ்வோடு
மதிய உறக்கம் கொள்ள
சனி ஞாயிறுகளை நானும்
எதிர்நோக்கி இருக்கின்றேன்

வார விடுமுறை வாழ்த்துக்களுடன்

💐💐💐💐💐💐💐💐💐💐

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
06.07.18

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...