மதிய உறக்கம்
மனதை கிறக்கும்
வயிறு முட்ட உண்டு
வெற்றிலை பாக்கிட்டு
தலைமாட்டில் கைவைத்து
சற்றே சாய்ந்திடனும்
கண்ணயர்ந்து நாமும்
துயில் கொண்டிடவே
சாயந்திர நேரம் வருவது
சத்தியமாய் தெரியாது
படுத்தெழுந்த பின்னே
பில்டர் காபி அருந்த
பிறவிப் பயன் கிட்டும்
பேரானந்தம் எட்டும்
வெள்ளிக் கிழமையிலே
வாரக்கடைசியினை
வரவேற்க காத்திருக்கும்
உற்சாக மனிதன் நான்
சுவையான உணவும்
சரியான உறக்கமும்
அமைந்தால் அதுவே
அமரலோகம் என்பேன்
மட்டற்ற மகிழ்வோடு
மதிய உறக்கம் கொள்ள
சனி ஞாயிறுகளை நானும்
எதிர்நோக்கி இருக்கின்றேன்
வார விடுமுறை வாழ்த்துக்களுடன்
💐💐💐💐💐💐💐💐💐💐
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
06.07.18
No comments:
Post a Comment