ஏன் இப்படி
இனம்புரியாத ஓர்
குழப்பம் என் மனதில்
ஒவ்வொரு நாளும்
வெவ்வேறு விதமாய்..
புதிய சவால்களுடன்
எதிர்நோக்கி இருக்கிறேன்
புதிய பாதையில் நான்
பயணிக்க நினைக்கிறேன்..
அலுவலகத்து அழுத்தங்களை
அங்கேயே நாம் மறந்திடுவோம்
அனாவசியமாய் அதை சுமந்திடவே
ஆஸ்பித்திரிக்கு சென்றிடுவோம்..
நிரந்தரமாக எதுவும் இல்லை
நாளை நமது கையில் இல்லை
நடப்பது என்பது நடந்தே தீரும்
நம்பிக்கையே வாழ்வின் எல்லை..
மனக் குழப்பத்திற்கு ஓர் மருந்தாக
கவிதை வரிகளை நானெடுத்தேன்
மகேஸ்வரன் மேலே பாரத்தையிட்டு
கலங்கும் மனதை தேற்றிக்கொண்டேன்
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
30.08.18
No comments:
Post a Comment