Search This Blog

Thursday, August 30, 2018

ஏன் இப்படி

ஏன் இப்படி

இனம்புரியாத ஓர்
குழப்பம் என் மனதில்
ஒவ்வொரு நாளும்
வெவ்வேறு விதமாய்..

புதிய சவால்களுடன்
எதிர்நோக்கி இருக்கிறேன்
புதிய பாதையில் நான்
பயணிக்க நினைக்கிறேன்..

அலுவலகத்து அழுத்தங்களை
அங்கேயே  நாம் மறந்திடுவோம்
அனாவசியமாய் அதை சுமந்திடவே
ஆஸ்பித்திரிக்கு  சென்றிடுவோம்..

நிரந்தரமாக எதுவும் இல்லை
நாளை நமது கையில் இல்லை
நடப்பது என்பது நடந்தே தீரும்
நம்பிக்கையே வாழ்வின் எல்லை..

மனக் குழப்பத்திற்கு ஓர் மருந்தாக
கவிதை வரிகளை நானெடுத்தேன்
மகேஸ்வரன் மேலே பாரத்தையிட்டு
கலங்கும் மனதை தேற்றிக்கொண்டேன்

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
30.08.18

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...