இ(எ)துவும் கடந்து போகும்
இ(எ)துவும் கடந்து போகும்
என நினைத்து வாழ்வதே
நமது வாழ்க்கையாகும்..
பூமியின் சுழற்சியில்
காலையும் மாலையாகும்
மாலையோ காலையாகும்..
நமது இயற்கையும் கூட
ஒரே நாளில் மாறுகையில்
செயற்கைக்கு விதிவிலக்கேது?
சொப்பணம் கண்ட நாட்கள்
சோம்பேறியாய் திரிந்த நாட்கள்
சுகமாகவேத் தான் தெரியும்..
காலம் கடக்கையிலே
கண்ணீரில் கரைகையிலே
கவனத்தை அது சிதறடிக்கும்..
கலங்கி போய் நிற்காமல்
கடவுளை நாம் நம்புவோம்
குழப்பத்தை தவிர்ப்போம்..
இ(எ)துவும் கடந்து போகும்
என நினைத்து வாழ்வதே
நமது வாழ்க்கையாகும்..
ஏதோ நினைத்தேன் எழுதுகிறேன்
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
12.09.18
No comments:
Post a Comment