Search This Blog

Monday, September 17, 2018

என்னவளே

என்னவளே

குடை சாய்ந்து
விடுவது போல்
நடை சாய்த்து
செல்பவளே..

இடை சிறுத்து
இருப்பதனால்
உடை சரிந்து
விழுகிறதோ..

சடை முடித்து
பூச்சூடி பெரும்
படையை பின்னே
இழுப்பவளே..

மடையனைப் போல்
பிதற்றுகின்றேன்
மனமிரங்கி வர
மாட்டாயா..

தடையேதும்
இல்லாமல்
தமிழாலுனைத்
துதிக்கின்றேன்..

மடை திறந்த
வெள்ளம் போல்
உனைக் கண்டு
விக்கித்தேன்..

விடையொன்றை
நவில்வாயோ
கடை விழியால்
பார்ப்பவளே..

சும்மா திங்கட் கிழமை
அழுவலகத்து சூடு
தணிய எழுதப்பட்டது
வேறொன்றுமில்லை..

😁😁😁😁😁😁😁😁

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
17.09.18

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...