என்னவளே
குடை சாய்ந்து
விடுவது போல்
நடை சாய்த்து
செல்பவளே..
இடை சிறுத்து
இருப்பதனால்
உடை சரிந்து
விழுகிறதோ..
சடை முடித்து
பூச்சூடி பெரும்
படையை பின்னே
இழுப்பவளே..
மடையனைப் போல்
பிதற்றுகின்றேன்
மனமிரங்கி வர
மாட்டாயா..
தடையேதும்
இல்லாமல்
தமிழாலுனைத்
துதிக்கின்றேன்..
மடை திறந்த
வெள்ளம் போல்
உனைக் கண்டு
விக்கித்தேன்..
விடையொன்றை
நவில்வாயோ
கடை விழியால்
பார்ப்பவளே..
சும்மா திங்கட் கிழமை
அழுவலகத்து சூடு
தணிய எழுதப்பட்டது
வேறொன்றுமில்லை..
😁😁😁😁😁😁😁😁
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
17.09.18
No comments:
Post a Comment