Search This Blog

Wednesday, September 26, 2018

மாடு

மாடு

பாலும் தயிரும் நெய்யும்
வெண்ணையும் நமக்கு
மாடு வரமளிக்கும்
அமிர்தங்களாம்..

மரித்த பின்னும் தனது
தோலைக் கொடுத்து
மத்தளம் மிருதங்கம்
செய்யப் பயன்படுமாம்..

பச்சிளம் குழந்தைக்கு
பசும் பால் தருவோம்
பயில்வான்களுக்கு
எருமைப் பால் தருவோம்..

பசுஞ்சாணத்தை எரித்து
புனிதத் திருநீறு ஆக்கி
பூசித்துக் கொள்வோம்
பூசையும் செய்வோம்..

வயலில் உழுதிட
காளைகள் நமக்கு
அடுப்பும் எரிந்திட
விராட்டிகள் இருக்கு..

பல நூறு நோய்களை
விரட்டி அடித்திட
பசுவின் கோமியம்
கைவசம் இருக்கு..

நாட்டின் பொக்கிஷம்
என்னவென்று கேட்டால்
மாடுகள் தான் என்று
நான் உரைப்பேன்..

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
27.09.18

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...