மகேஸ்வரா
முயலகனாய் நானிருந்தால்
மிதிபட்டு உடனிருப்பேன்
கிளியாக நான் பிறந்தால்
சிவகாமி கரம் இருப்பேன்
மூஞ்சூராய் பிறந்திருந்தால் உன் பிள்ளையிடம் நானிருப்பேன்
மயிலாக நானிருந்தால் அழகு
முருகனுக்கு துணையிருப்பேன்
மனிதனாக பிறந்த விட்டு
மண்ணில் அல்லல் படுகின்றேன்
மாதவங்கள் செய்கின்றேன்
மனமிரங்க மாட்டாயோ
மரணிக்கும் முன்னே யான்
மண்டியிட்டு தொழுதிடிவேன்
மகேசனே உன் அகத்தில்
மலரடியைப் பணிவேனே..
ஓம் சிவாய நமஹ 🙏🙏🙏
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
27.09.18
No comments:
Post a Comment