Search This Blog

Thursday, September 27, 2018

மகேஸ்வரா

மகேஸ்வரா

முயலகனாய் நானிருந்தால்
மிதிபட்டு உடனிருப்பேன்

கிளியாக நான் பிறந்தால்
சிவகாமி கரம் இருப்பேன்

மூஞ்சூராய் பிறந்திருந்தால் உன் பிள்ளையிடம் நானிருப்பேன்

மயிலாக நானிருந்தால் அழகு
முருகனுக்கு துணையிருப்பேன்

மனிதனாக பிறந்த விட்டு
மண்ணில் அல்லல் படுகின்றேன்

மாதவங்கள் செய்கின்றேன்
மனமிரங்க மாட்டாயோ

மரணிக்கும் முன்னே யான்
மண்டியிட்டு தொழுதிடிவேன்

மகேசனே உன் அகத்தில்
மலரடியைப் பணிவேனே..

ஓம் சிவாய நமஹ 🙏🙏🙏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
27.09.18

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...