வேற்றுமையில் ஒற்றுமை
கைலாசத்து குழந்தைகளாம்
கணபதியையும் குமரனையும்
ஆரிய திராவிடர் எனப் பிரித்து
அட்டூழியம் புரிவோரே..
ஆரியக் கடவுளென்றும்
திராவிடக் கடவுளென்றும்
கடவுளிடம் கூட பேதத்தைப்
பார்க்கும் முட்டாள்களே..
நாத்திகராய் இருந்து கொண்டு
நம்பிக்கையை கொச்சைப்படுத்தி
அற்பத்தனமாய் சந்தோஷிக்கும்
அறிவில்லா மூடர்களே..
அழிக்க நீர் நினைத்தாலும்
ஆத்திகத்திற்கு அழிவில்லை
ஆயிரம் இடர் வரினும் இன்னும்
ஆலமரமாய் தழைத்தோங்கும்..
சிறுபான்மை சமூகத்திற்கு
சொம்பு தூக்கும் மாந்தர்களே
பெரும்பான்மை இந்துக்களை
புறந்தள்ளி வசைவது ஏன்..
ஓட்டு வங்கிக்கு ஆசைபட்டு
ஒற்றுமையை குலைப்பவரே
இந்து முஸ்லீம் கிருத்துவரின்
இணக்கம் என்றும் அழியாது..
வேற்றுமையில் ஒற்றுமையே
வேத பூமியாம் நம் பாரதத்தில்
மொழி மதத்தால் வேறானாலும்
உணர்வால் நாங்கள் ஒன்றேயாம்..
ஏதோ நினைத்தேன் எழுதுகிறேன்
ஜெய் ஹிந்த் வந்தே மாதரம்
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
14.09.18
No comments:
Post a Comment