Search This Blog

Friday, September 14, 2018

எங்கள் வீட்டு கணபதி பூஜை

எங்கள் வீட்டு கணபதி பூஜை

பல வருடங்களாக வர்ணம் தீட்டிய
விநாயகர் வாங்கி பூசித்து வந்தது
மனதிற்கு சற்றே நெருடலாய்
இருந்தது..

ஆற்றுக் களிமண்ணில்
அச்சு வைத்து அழகான
ஆனைமுகனை வாங்கியது
அளவற்ற மகிழ்ச்சி எனக்கு..

பணிமாற்றம் பெற்ற பின்னே
தமிழ்நாட்டிற்க்கு வந்தது மிக
சௌகர்யமாய் ஆனது..

எருக்ககம்பூவும் அருகம்புல்லும்
மாவிலையோடு அர்ச்சனை செய்ய
எல்லையில்லா ஆனந்தமடைந்தேன்..

வெள்ளை நந்தியாவட்டை
சிகப்பு செம்பருத்தி மல்லி
செவ்வரளியுடன் ரோஜாவும்
சேர்த்து கணபதியை இன்று
குடும்பத்தோடு பூசித்தேன்..

அப்பம் வடை கொழுக்கட்டை
பாயசத்துடன் இட்லி சேர்த்து
அவல் பொரி வெல்லத்துடனே
ஆப்பிள் மாதுளை கொய்யா
வாழைப்பழம் விளாம்பழம்
சாத்துக்குடி நாவற்பழம் என
படையளிட்டு பாதம் பணிந்தேன்..

குறையாவும் தீர்த்து வைப்பாய்
குறுமுனி கும்பிட்ட கணநாதா
நிறைவான வாழ்வளிப்பாய்
நெஞ்சார உனைப் பணிகின்றேன்..

ஔவைக்கு அருளியவா
ஔடதமாய் எமை ரக்ஷிப்பாய்
வினைகளைக் களைந்து நீ
வழித்துணையாய் இருப்பாய்..

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
13.09.2018

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...