எங்கள் வீட்டு கணபதி பூஜை
பல வருடங்களாக வர்ணம் தீட்டிய
விநாயகர் வாங்கி பூசித்து வந்தது
மனதிற்கு சற்றே நெருடலாய்
இருந்தது..
ஆற்றுக் களிமண்ணில்
அச்சு வைத்து அழகான
ஆனைமுகனை வாங்கியது
அளவற்ற மகிழ்ச்சி எனக்கு..
பணிமாற்றம் பெற்ற பின்னே
தமிழ்நாட்டிற்க்கு வந்தது மிக
சௌகர்யமாய் ஆனது..
எருக்ககம்பூவும் அருகம்புல்லும்
மாவிலையோடு அர்ச்சனை செய்ய
எல்லையில்லா ஆனந்தமடைந்தேன்..
வெள்ளை நந்தியாவட்டை
சிகப்பு செம்பருத்தி மல்லி
செவ்வரளியுடன் ரோஜாவும்
சேர்த்து கணபதியை இன்று
குடும்பத்தோடு பூசித்தேன்..
அப்பம் வடை கொழுக்கட்டை
பாயசத்துடன் இட்லி சேர்த்து
அவல் பொரி வெல்லத்துடனே
ஆப்பிள் மாதுளை கொய்யா
வாழைப்பழம் விளாம்பழம்
சாத்துக்குடி நாவற்பழம் என
படையளிட்டு பாதம் பணிந்தேன்..
குறையாவும் தீர்த்து வைப்பாய்
குறுமுனி கும்பிட்ட கணநாதா
நிறைவான வாழ்வளிப்பாய்
நெஞ்சார உனைப் பணிகின்றேன்..
ஔவைக்கு அருளியவா
ஔடதமாய் எமை ரக்ஷிப்பாய்
வினைகளைக் களைந்து நீ
வழித்துணையாய் இருப்பாய்..
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
13.09.2018
No comments:
Post a Comment