Search This Blog

Wednesday, October 10, 2018

வடுகப்பட்டியான்

வடுகப்பட்டியான்

கவிதையில் தேர்ந்தவன் நீ
களவியிலும் தேர்ந்தவன் நீ
நித்தம் உனைப் பற்றி வரும்
நிஜங்கள் உன் தோலுரிக்குது.

நிழலுக்குப் பின்னால் ஒளிந்து
நடத்திய சகவாசங்கள் இன்று
நாட்டு மக்களின் மத்தியில்
வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது.

ஆடையில் மட்டும் வெள்ளை
அகத்திலோ அட்டக் கருப்பு
ஆறு தேசிய விருதுகளையும்
உடனே நீ திருப்பித் தந்து விடு.

உனது வரிகளில் மயங்கி
கவி புனைய வந்த பலரில்
நானும் ஒருவன் ஆனால்
இப்படி ஏமாற்றி விட்டீரே.

எமது தெய்வம் ஆண்டாளை
பழித்துப் பேசிய பாதகனே
உனது உண்மை முகத்தை
இன்று அறிந்து கண்டோம்.

உம்மை ஆதரித்துக் கூவிய
பாரதிராஜாவும் மற்றொரும்
இப்போது எங்கே சென்றனர்
அவர்க்கும் பங்கு உண்டோ.

எங்கள் இசைஞானி அன்றே
ஒதுக்கி வைத்த காரணம்
இப்போது தான் எங்களுக்கு
புரிய வந்துள்ளது.

சமீப காலமாக தமக்கு
வாய்ப்புகள் வருவதில்லை
சேர்த்த புகழைக் கூட தாம்
சபலத்தில் தொலைத்து விட்டீர்.

இனி உமது வருங்காலம்
பெருத்த கேள்விக்குறியே
தனித்து உனது வீட்டில்
பசித்து மடிந்து போவீர்.

கழகத்தின் தயவினிலே
காலத்தை கழித்தவர் நீர்
கட்டுமரம் மறைந்த பின்னே
கடனாளியாகியே வீழ்வீர்.

வடுகப்பட்டியே
வருத்தத்துடன்
வரிகளை நான்
வடித்துள்ளேன்.

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
10.10.18

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...