Search This Blog

Tuesday, October 9, 2018

வாழ்க்கைத் தேர்வு

வாழ்க்கைத் தேர்வு

தேர்வு முடிவுகளைத்
தெரிந்து தேர்வினை
எழுதும் மாணாக்கராய்
உலகில் வாழுகின்றோம்.

விடைத்தாள் கிட்டியும்
வினாக்களை நிறப்பாமல்
வெற்றுத் தாள்களையே
திரும்பத் தருகின்றோம்.

வாழ்க்கை என்னும்
வகுப்பறையில் நாம்
வெட்டியாய் பொழுதைக்
க(ழி)ளிக்கின்றோம்.

ஆண்டவன் என்னும்
ஆசிரியர் சோதித்தால்
அத்தனை பாடத்திலும்
அவுட்டு ஆகின்றோம்.

அரியர்கள் வைத்தும்
அட்டெம்ப்டு எடுத்தும்
ஆயுசு முழுமைக்கும்
தேர்ச்சி ஆவதில்லை.

மனப்பாடம் செய்து
தேர்வடைவது போல்
மனதில் இறைவனை
சதா நினைத்திடுவோம்.

கடவுளின் நாமத்தை
நித்தமும் ஜெபித்து
காசினியில் மகிழ்வாய்
நாமும் வாழ்ந்திடுவோம்.

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
09.10.18

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...