வாழ்க்கைத் தேர்வு
தேர்வு முடிவுகளைத்
தெரிந்து தேர்வினை
எழுதும் மாணாக்கராய்
உலகில் வாழுகின்றோம்.
விடைத்தாள் கிட்டியும்
வினாக்களை நிறப்பாமல்
வெற்றுத் தாள்களையே
திரும்பத் தருகின்றோம்.
வாழ்க்கை என்னும்
வகுப்பறையில் நாம்
வெட்டியாய் பொழுதைக்
க(ழி)ளிக்கின்றோம்.
ஆண்டவன் என்னும்
ஆசிரியர் சோதித்தால்
அத்தனை பாடத்திலும்
அவுட்டு ஆகின்றோம்.
அரியர்கள் வைத்தும்
அட்டெம்ப்டு எடுத்தும்
ஆயுசு முழுமைக்கும்
தேர்ச்சி ஆவதில்லை.
மனப்பாடம் செய்து
தேர்வடைவது போல்
மனதில் இறைவனை
சதா நினைத்திடுவோம்.
கடவுளின் நாமத்தை
நித்தமும் ஜெபித்து
காசினியில் மகிழ்வாய்
நாமும் வாழ்ந்திடுவோம்.
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
09.10.18
No comments:
Post a Comment