படிப்போம் சிறப்போம்
கண்டதைப் படித்திட
பண்டிதனாகலாம்
கண்டதையும் படித்திட
புலவனாய் ஆகலாம்.
பக்கங்களைப் புரட்டவே
பாதைத் தெளிவாகும்
பழுது பட்ட மூளையும்
பளிச்சென்று புலனாகும்.
தனிமையை விரட்டிட
புத்தகத்தைத் தேர்ந்தெடு
தரணியில் தலை நிமிர்ந்திட
பலவற்றையும் நீ படித்திடு.
நூலகத்தை நண்பனாக்கி
நேரத்தை அதனுடன் கூட்டி
நம்மை நாம் செம்மையாக்க
நாளையும் நம் வசப்படும்.
நூல் நூற்கப்படுவதினால்
மானத்தைக் காக்க உதவும்.
நூல் படிக்கப்படுவதினால்
மானத்தைக் காத்து உதவும்.
இனிய காலை வணக்கம்
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
03.10.18
No comments:
Post a Comment