மஹாத்மா
இப்படி ஒரு மனிதர்
இருந்தார் என்பதை
இன்னும் நம்மால்
நம்ப முடியவில்லை.
ஆயுதம் எடுக்காமல்
அறப்போர் முறையில்
ஆங்கிலேயரை எதிர்த்த
அஹிம்சாவாதி.
கேள்விக்குறி ஒத்த
உருவத்தைக் கொண்டு
காலனி ஆதிக்கத்திற்கு
கேள்விக்கணை தோடுத்தவர்
ஏழைப் பங்காளனாய்
மேல் வஸ்திரம் துறந்து
அரைக்கால் வேஷ்டியுடன்
ஆயுசுக்கும் வாழ்ந்தவர்.
உள்நாட்டு உற்பத்திக்கு
உத்வேகம் அளிக்க வேண்டி
கைராட்டை நூல் நூற்று
கதராடை பிரசாரித்தார்.
ஒரு தேசம் ஒரு மொழி எனும்
சித்தாந்தத்தை முன் வைத்து
நாடு முழுமைக்கும் ஹிந்தி
மொழி பரவ பாடுபட்டார்.
சொந்த வாழ்க்கையையே
சுயசரிதை எனும் நூலெழுதி
வெளிப்படையாய் வாழ்ந்த
உத்தம மனிதர்.
வெளியில் இருந்ததை விடவும்
சிறையில் இருந்ததே அதிகம்
நாடு முழுவதும் நடந்து சென்று
நாட்டு மக்களை ஒன்று திரட்டினார்.
சத்தியாகிரகம் எனும்
சாட்டையை கையிலெடுத்து
ஒத்துழையாமை மூலம்
பரங்கியரை விரட்டியடித்தார்.
மகாகவி பாரதியின் வரிகளில்
வாழ்க நீ! எம்மான்
இந்த வையத்து நாட்டி
லெல்லாம் தாழ்வுற்று
வறுமை மிஞ்சி விடுதலை
தவறிக் கெட்டுப்பாழ்பட்டு
நின்ற தாமோர் பாரத தேசந்
தன்னை வாழ்விக்க வந்த
காந்தி மஹாத்மா நீ
வாழ்க, வாழ்க!
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
02.10.18
No comments:
Post a Comment