மாற்ற(று)ங்கள்
உறவினர்களோடு
கூடி இருக்கையில்
கைப்பேசியை சற்று
ஒதுக்கி வைப்போம்.
நண்பர்களோடு
அளவளாவுகையில்
நச்சரிக்கும் அழைப்பை
நிறுத்தி வைப்போம்.
ஆண்டவன் சந்நிதியில்
அமைதி வேண்டுகையில்
அலைபேசி யாவையும்
அணைத்து வைப்போம்.
குழந்தைகளுடனே
கொஞ்சிடும் பொழுதினில்
தொலைப்பேசி இணைப்பை
துண்டித்து வைப்போம்.
இல்லத்தரசியின்
இன்முகம் நோக்கையில்
இயந்திரத்தை சற்றே
இயக்காது வைப்போம்.
நினைத்தேன் எழுதுகிறேன்.
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
30.10.18
No comments:
Post a Comment