Search This Blog

Tuesday, October 30, 2018

மாற்ற(று)ங்கள்

மாற்ற(று)ங்கள்

உறவினர்களோடு
கூடி இருக்கையில்
கைப்பேசியை சற்று
ஒதுக்கி வைப்போம்.

நண்பர்களோடு
அளவளாவுகையில்
நச்சரிக்கும் அழைப்பை
நிறுத்தி வைப்போம்.

ஆண்டவன் சந்நிதியில்
அமைதி வேண்டுகையில்
அலைபேசி யாவையும்
அணைத்து வைப்போம்.

குழந்தைகளுடனே
கொஞ்சிடும் பொழுதினில்
தொலைப்பேசி இணைப்பை
துண்டித்து வைப்போம்.

இல்லத்தரசியின்
இன்முகம் நோக்கையில்
இயந்திரத்தை சற்றே
இயக்காது வைப்போம்.

நினைத்தேன் எழுதுகிறேன்.

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
30.10.18

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...