Search This Blog

Sunday, October 28, 2018

சரவணா ஸ்டோர்ஸ்

சரவணா ஸ்டோர்ஸ்

ஆடைக் குவியல்கள்
அமர்க்கமாய் இருக்குது
பிரமாண்ட கட்டிடமும்
பிரமிக்க வைக்குது
மனதுக்கு மட்டும் ஏனோ
எனக்கு திருப்தி இல்லை..

ஒன்றெடுத்தால்
மற்றொன்று
அதையெடுத்தால்
வேறொன்று ஆனால்
மனதுக்கு மட்டும் ஏனோ
எனக்கு திருப்தி இல்லை..

சில நூறுகளில் அன்று
துணிகள் எடுத்தது போக
பத்து ஆயிரங்கள் கொட்டி
பணம் செலவழித்தாலும்
மனதுக்கு மட்டும் ஏனோ
எனக்கு திருப்தி இல்லை..

பத்து தளங்கள் முழுதும்
பொங்கி வழியும் கூட்டம்
விளம்பரத்தைக் கண்டு
வியந்து வரும் மக்கள்
மனதுக்கு மட்டும் ஏனோ
எனக்கு திருப்தி இல்லை..

எத்தனை கடைகள்
பரப்பி வைத்தாலும்
அனைத்திலும் கூட்டம்
நிரம்பி வழிகின்றது
மனதுக்கு மட்டும் ஏனோ
எனக்கு திருப்தி இல்லை..

கொட்டாவி விட்டபடி
கடையின் மூலையிலே
கடிகாரத்தைப் பார்த்தபடி
கைப்பேசியுடன் அமர்ந்தேன்
வார்த்தைகளை வரிகளாக்கி
கவிதையினை நான் படைத்தேன்..

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
28.10.18

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...