செல் லுக்குள் செல்லாதே
முகநூல் பக்கத்துக்கு
மொத்தமாய் இப்போ
முழுக்கு போட்டாச்சு.
வாட்ஸப் தளத்துக்கும்
கொஞ்சமாய் இனிமே
பூட்டு போடணும்.
எப்பப் பார்த்தாலும்
எல்லா இடத்திலும்
செல்லும் கையுமாய்.
காலையிலிருந்து
இரவு வரைக்கும்
குனிந்த தலையுடன்.
நிறுத்த வேண்டும்
இப்போக்கிலிருந்து
விடுபட வேண்டும்.
புத்தகம் படிக்கலாம்
செய்திகள் கேட்கலாம்
சேர்ந்து களிக்கலாம்.
நண்பர்களுடனே
நலம் விசாரிக்கலாம்
நல்லது அறியலாம்.
உறவினர்களுடனே
பேசி மகிழலாம் கூடி
பேரானந்தம் அடையலாம்.
கோவிலுக்குச் சென்று
கும்பிடு போடலாம்
குறைகளைத் தீர்க்கலாம்.
இன்னும் எவ்வளவோ
இரசிப்பதை விட்டு விட்டு
இயந்திர வாழ்க்கை ஏன் ?
செல் லுக்குள் செல்லாமல்
செயலிழந்து போகாமல்
செயல்பட வேண்டும்.
கைப்பேசியே இனி
என் கிட்டே வாராதே
தொல்லை தாராதே..
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
14.11.2018
No comments:
Post a Comment