தாயே ஈஸ்வரி
காஞ்சியிலே
கொலுவிருக்கும்
காமாக்ஷி
கருணை உள்ளம்
கொண்டவளே
காமேஸ்வரி
காசியிலே
வீற்றிருக்கும்
விசாலாக்ஷி
காசினியை
காப்பவளே
விஸ்வேஸ்வரி
மதுரையை
ஆளுகின்ற
மீனாக்ஷி
மக்கள் குறை
தீர்ப்பவளே
மாகேஸ்வரி
பர்வத ராஜனின்
திருக்குமாரி
பார்வதி தேவி
தட்சனின்
திருமகளாம்
தாக்ஷாயிணி
தரணியை
ஆளுகின்ற
காத்யாயினி
மங்களம்
நல்கிடும்
முத்துமாரி
மாங்கல்ய
பலமருளும்
மாரியம்மா
சங்கடத்தை
தீர்த்து வைக்கும்
சாம்பவியே
சன்முகணை
ஈன்றெடுத்த
அம்பிகையே
பிள்ளையாரைப்
பெற்றெடுத்த
பரமேஸ்வரி
புவனத்தை
காத்தருளும்
புவனேஸ்வரி
தாயே உனை
சரணடைவேன்
காத்தருள்வாயே
தவறு செய்யின்
பிழை பொறுத்து
ஆட்கொள்வாயே.
🙏🙏🙏🙏🙏🙏🙏
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
16.11.18
No comments:
Post a Comment