Search This Blog

Friday, November 16, 2018

தாயே ஈஸ்வரி

தாயே ஈஸ்வரி

காஞ்சியிலே
கொலுவிருக்கும்
காமாக்ஷி

கருணை உள்ளம்
கொண்டவளே
காமேஸ்வரி

காசியிலே
வீற்றிருக்கும்
விசாலாக்ஷி

காசினியை
காப்பவளே
விஸ்வேஸ்வரி

மதுரையை
ஆளுகின்ற
மீனாக்ஷி

மக்கள் குறை
தீர்ப்பவளே
மாகேஸ்வரி

பர்வத ராஜனின்
திருக்குமாரி
பார்வதி தேவி

தட்சனின்
திருமகளாம்
தாக்ஷாயிணி

தரணியை
ஆளுகின்ற
காத்யாயினி

மங்களம்
நல்கிடும்
முத்துமாரி

மாங்கல்ய
பலமருளும்
மாரியம்மா

சங்கடத்தை
தீர்த்து வைக்கும்
சாம்பவியே

சன்முகணை
ஈன்றெடுத்த
அம்பிகையே

பிள்ளையாரைப்
பெற்றெடுத்த
பரமேஸ்வரி

புவனத்தை
காத்தருளும்
புவனேஸ்வரி

தாயே உனை
சரணடைவேன்
காத்தருள்வாயே

தவறு செய்யின்
பிழை பொறுத்து
ஆட்கொள்வாயே.

🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
16.11.18

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...