தீபாவளி
நாமெல்லோரும்
நரகாசுரனின்
அ(வ)ம்சங்களே.
காம, குரோத,
மத, மாத்ஸர்யம்
எனும் தீய எண்ணம்
நம்முள் உள்ளதால்
நரகாசுரனின்
அ(வ)ம்சங்களே.
இந்த தீப ஒளித்
திருநாளில்
சத்யபாமா சமேத
ஸ்ரீகிருஷ்ணனின்
பாதம் பணிவோம்.
நம்முள் குடிகொண்ட
தீய எண்ணங்களை
தீக்கிரையாக்கி
திருமாலின் திருவடி
பற்றிட சபதமெடுப்போம்.
நம்முள் உள்ளே
நரகாசுரனை
விடுவிப்போம்.
தித்திக்கும் தீபாவளி
நந்நாளாம் இன்று
நம் எல்லோர் வாழ்விலும்
வளமும் நலமும் என்றும்
பெருகட்டும்.
தீப ஒளி வாழ்த்துக்களுடன்..
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
06.11.18
No comments:
Post a Comment