Search This Blog

Sunday, November 25, 2018

ஞாயிறு போற்றுதும்

ஞாயிறு போற்றுதும்

அண்டத்தின்
தொடக்கத்தில்
இருந்தவன் நீயே

அண்ட வெளியில்
ஒளிர்ந்திடும்
அருணனும் நீயே

நில்லாமல்
நகர்ந்திடும்
திவாகரன் நீயே

நவ கோள்களை
வழி நடத்தும்
நாயகனும் நீயே

புவியினை
உயிர்ப்பிக்கும்
புரவலன் நீயே

நாத்திகனும்
நம்பி தொழும்
நவக்கிரகமும் நீயே

பயத்தினைப்
போக்கிவிடும்
பகலவன் நீயே

பாபத்தை
நீக்கி விடும்
பாஸ்கரனும் நீயே

உழவுக்கு
உதவிடும்
உத்தமன் நீயே

உலகத்தை
இயக்கிடும்
சக்தியும் நீயே

அருளைப்
பொழிகின்ற
ஆதித்தன் நீயே

இருளை
அகற்றுகின்ற
இறைவனும் நீயே

மக்களைக்
காத்திடும்
மித்திரன் நீயே

ரதத்திலேறி
ரட்சிக்கும்
ரவியும் நீயே

சஞ்சலத்தைப்
போக்கிடும்
சூரியன் நீயே

பால்வெளியில்
சஞ்சரிக்கும்
பானுவும் நீயே

கண்ணுக்குப்
புலனாகும்
ககபூஷண் நீயே

ஞாலத்தை
இயக்கிடும்
ஞாயிறும் நீயே.

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
25 .11 .18

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...