ஞாயிறு போற்றுதும்
அண்டத்தின்
தொடக்கத்தில்
இருந்தவன் நீயே
அண்ட வெளியில்
ஒளிர்ந்திடும்
அருணனும் நீயே
நில்லாமல்
நகர்ந்திடும்
திவாகரன் நீயே
நவ கோள்களை
வழி நடத்தும்
நாயகனும் நீயே
புவியினை
உயிர்ப்பிக்கும்
புரவலன் நீயே
நாத்திகனும்
நம்பி தொழும்
நவக்கிரகமும் நீயே
பயத்தினைப்
போக்கிவிடும்
பகலவன் நீயே
பாபத்தை
நீக்கி விடும்
பாஸ்கரனும் நீயே
உழவுக்கு
உதவிடும்
உத்தமன் நீயே
உலகத்தை
இயக்கிடும்
சக்தியும் நீயே
அருளைப்
பொழிகின்ற
ஆதித்தன் நீயே
இருளை
அகற்றுகின்ற
இறைவனும் நீயே
மக்களைக்
காத்திடும்
மித்திரன் நீயே
ரதத்திலேறி
ரட்சிக்கும்
ரவியும் நீயே
சஞ்சலத்தைப்
போக்கிடும்
சூரியன் நீயே
பால்வெளியில்
சஞ்சரிக்கும்
பானுவும் நீயே
கண்ணுக்குப்
புலனாகும்
ககபூஷண் நீயே
ஞாலத்தை
இயக்கிடும்
ஞாயிறும் நீயே.
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
25 .11 .18
No comments:
Post a Comment