திருக்கார்த்திகை
சிவாலயங்களில்
அருஉருவம் கொண்டு
சிவலிங்க ரூபமாய்
காட்சியும் தருவான்.
சிதம்பரத்தில் அவன்
உருவம் பெற்று
தில்லை நடராஜனாக
அருள்பாளிப்பான்.
திருவண்ணாமலையில்
அருவ ஸ்வரூபமாய்
அக்கினி ரூபத்தில்
ஆட்சியும் புரிவான்.
மேல் நோக்கி எரியும்
தீப ஒளியைப் போல
எண்ணமும் மேலாய்
இருத்தல் வேண்டும்.
திருக்கார்த்திகை
திருநாளில் ஈசனின்
திருவைந்தெழுத்து ஓதி
திருவடி பற்றிட வேண்டும்.
திருச்சிற்றம்பலம் !!!!
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
22.11. 18
No comments:
Post a Comment