Search This Blog

Monday, November 26, 2018

சின்னக் காதல்

சின்னக் காதல்

என் தாய்க்கும்
தாரத்திற்கும்
அடுத்தபடியாக
எனது கனவில்
அதிகமாக வரும்
அம்பிகையே !!

என்னவென்று
உன்னைப் பற்றி
எழுதுவது ?

உன்னைக் கண்டாலே
உடை ஒழுங்கு பெறும்
நடையும் தெளிவு பெறும்.

சின்ன வயதில் உனை
சிநேகித்ததால் அதை
பாலினக் கவர்ச்சியென
பெரியவர்கள் கூறிடுவர்.

உன்னிடம் நேரில் கூற
எனக்கு புரியவில்லை
காதல் என்பதே அன்று
தெரியவில்லை.

இந்த வயதிலும்
உனது நினைவு
வருகையிேலே
தென்றல் தீண்டும்
கார்மேக மழை போல
கண்ணீர் மழை என்
கன்னத்தில் விழுகிறது.

உனது பிம்பம் என்றும்
மனதில் இருந்ததினால்
எந்த ஒரு காதலும் என்
பின்னாளில் வந்ததில்லை.

ஆம்,

என் மனைவியை மட்டுமே
இன்று காதலித்து வருகிறேன்.

காதல் செத்து போனது
என ஒருபோதும் கூறாதீர்
மணமாகாத காதல் தான்
வெகுகாலம் வரை உயிர்ந்து
மணம் வீசும் மல்லிகையாம்.

🌹🌹🌹🌹🌹🌷🌷🌷🌷🌷🌷

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ பாலா 27.11.18

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...