புதன் கிழமை
பாதி வாரம்
கடந்து இன்று
மீதி வாரத்தில்
நிற்கிறேன்.
வெள்ளிக் கிழமை
செல்லும் வழியில்
வழி மேல் விழியுடன்
இருக்கிறேன்.
மூன்று நாட்கள்
முடிந்தால் போதும்
முழுதாய் களிக்க
விடுப்பு கிட்டும்.
நள்ளாறு கிழமை
வந்தால் நாளும்
மிகவும் நலமாய்
அமையும்.
ஐந்து நாட்கள்
அலுப்பும் தீர
சனியும் ஞாயிறும்
சத்தியம் தேவை.
சந்தோஷமாய்
சேர்ந்து குஷிக்க
சீக்கிரம் சனியின்
வரவும் தேவை.
சும்மா புதன் கிழமை
நையாண்டி 😎😎😎
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
28.11.2018
No comments:
Post a Comment