Search This Blog

Tuesday, November 27, 2018

புதன் கிழமை

புதன் கிழமை

பாதி வாரம்
கடந்து இன்று
மீதி வாரத்தில்
நிற்கிறேன்.

வெள்ளிக் கிழமை
செல்லும் வழியில்
வழி மேல் விழியுடன்
இருக்கிறேன்.

மூன்று நாட்கள்
முடிந்தால் போதும்
முழுதாய் களிக்க
விடுப்பு கிட்டும்.

நள்ளாறு கிழமை
வந்தால் நாளும்
மிகவும் நலமாய்
அமையும்.

ஐந்து நாட்கள்
அலுப்பும் தீர
சனியும் ஞாயிறும்
சத்தியம் தேவை.

சந்தோஷமாய்
சேர்ந்து குஷிக்க
சீக்கிரம் சனியின்
வரவும் தேவை.

சும்மா புதன் கிழமை
நையாண்டி 😎😎😎

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
28.11.2018

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...