மஹா பெரியவா
இனி ஒரு துறவி இவ்
உலகில் வருவரோ
எம்மைக் காத்து
இரட்சித்தருள்வரோ.
கும்பிட்டு நின்று
பணிந்தால் போதும்
குறையாவும் சடுதியில்
தீர்ந்தே போகும்.
வாய்த் திறந்து
பேசவும் வேண்டாம்
வேண்டும் வரங்கள்
தானாய்க் கிட்டும்.
ஒரு பிடி அவல் உண்டு
எளிமையாய் வாழ்ந்து
வாரத்தில் பல நாட்கள்
உபவாசம் இருந்தார்.
தன் காலடி கொண்டு
யாத்திரை செய்தே
பாரதம் வலம் வந்த
காலடி ஆவார்.
நம்பிக்கையோடே
நாளும் பணிந்தால்
நல்லது செய்திடும்
நடமாடும் தெய்வம்.
சந்திரசேகரா என
சரணாகதி அடைய
சத்தியமாய் நமமை
காத்திடும் தெய்வம்.
அவர் ஓரடி வைத்து
ஈரடி நடநதிட்டால்
ஓட்டத்தில் அடியோர்
தொடர்வராம்..
நாலடி இடத்தில்
குறுகலாய் துயின்று
மாலடி ஜெபித்திட்ட
பெரியவராம்.
மஹா பெரியவா
மஹிமை உணர்ந்து
மனக் கவலை தீர
சரணடைவோம்.
மஹேஸ்வரனின்
மறு அவதாரமாம்
ஸ்ரீ மடத்து ஸ்வாமி
பதம் பணிவோம்.
இனி ஒரு துறவி
இவ்வுலகில் வருவரோ
எம்மைக் காத்து
இரட்சித்தருள்வரோ.
ஜெய ஜெய சங்கர
ஹர ஹர சங்கர
காலடி சங்கர
காமாக்ஷி சங்கர !!!
அன்பன், சிதம்பரம் ஆர்.வி. பாலா
29.11. 18
No comments:
Post a Comment