பூவே செம்பூவே
சின்ன கொலுசு கட்டி
சிணுங்கி நடக்கும்
செவ்வந்தியே
மத்தாப்பு சிரிப்பிலே
மனதை மயக்கும்
மல்லிகையே
தெற்றுப் பல்
தெரிய சிரிக்கும்
தும்பைப் பூவே
மூச்சு வாங்க உனைப்
பார்க்கத் தோணும்
முல்லை மலரே
அழகாய் அன்ன
நடை போடும்
அல்லி மலரே
கடைவிழியில்
காதல் சிந்தும்
கனகாம்பரமே
உதட்டை சுழித்து
நடந்து வரும்
நந்தியாவட்டையே
மகாராணி போல
ரோட்டைக் கடக்கும்
ரோஜா மலரே
சத்தமின்றி
சாகடிக்கும்
சாமந்தியே
திகைப்பூட்டி
சிலிர்ப்பூட்டும்
திசம்பர் பூவே
சொன்னபடி
அருகில் வாராய்
செவ்வரளியே
பல்லக்கில் நிதம்
சுமப்பேன் என்
பாரிஜாதமே
உனை நெஞ்சில்
தாங்கிடுவேன்
தாமரைப் பூவே
பூப்பறிக்க வருகிறேன்
பொட்டு வைக்க வருகிறேன்
பொழுது போக்க வருகிறேன்..
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
10.11.18
No comments:
Post a Comment