Search This Blog

Friday, November 9, 2018

பூவே செம்பூவே

பூவே செம்பூவே

சின்ன கொலுசு கட்டி
சிணுங்கி நடக்கும்
செவ்வந்தியே

மத்தாப்பு சிரிப்பிலே
மனதை மயக்கும்
மல்லிகையே

தெற்றுப் பல்
தெரிய சிரிக்கும்
தும்பைப் பூவே

மூச்சு வாங்க உனைப்
பார்க்கத் தோணும்
முல்லை மலரே

அழகாய் அன்ன
நடை போடும்
அல்லி மலரே

கடைவிழியில்
காதல் சிந்தும்
கனகாம்பரமே

உதட்டை சுழித்து
நடந்து வரும்
நந்தியாவட்டையே

மகாராணி போல
ரோட்டைக் கடக்கும்
ரோஜா மலரே

சத்தமின்றி
சாகடிக்கும்
சாமந்தியே

திகைப்பூட்டி
சிலிர்ப்பூட்டும்
திசம்பர் பூவே

சொன்னபடி
அருகில் வாராய்
செவ்வரளியே

பல்லக்கில் நிதம்
சுமப்பேன் என்
பாரிஜாதமே

உனை நெஞ்சில்
தாங்கிடுவேன்
தாமரைப் பூவே

பூப்பறிக்க வருகிறேன்
பொட்டு வைக்க வருகிறேன்
பொழுது போக்க வருகிறேன்..

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
10.11.18

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...