Search This Blog

Sunday, December 16, 2018

நடராஜா

நடராஜா
4) பூத வாகனம்

அறுபத்தி நான்கு கலை
அருளியவன் அவனே
அறுபத்தி மூவர்க்கும்
அருளியவன் அவனே

தொல்லை இரும் பிறவி
தீர்ப்பவன் அவனே
தில்லையிலே திருநடனம்
புரிபவன் அவனே

அல்லல் படும் துயர்
களைபவன் அவனே
எல்லையிலா ஆனந்தம்
அளிப்பவன் அவனே

திருவெம்பாவை
ஏற்றவன் அவனே
திருவிளையாடலும்
புரிந்தவன் அவனே

தேவார திருவாசக
நாயகன் அவனே
தேவாதி தேவர்க்கு
மூத்தவன் அவனே

சித்ஸபேசா சிவ சிதம்பரம்.

திருச்சிற்றம்பலம் !!!

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

இன்று தில்லையிலே
பூத வாகனத்தில்
சிவானந்த நாயகி ஸமேத
ஸ்ரீ சோமாஸ்கந்தர் வீதியுலா.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
17.12.2018

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...