Search This Blog

Saturday, December 15, 2018

நடராஜா

நடராஜா

ஒன்றாக
உலகத்தையே
காத்து நம்மை
அருள்வது.

இரண்டு
பிரம்மோற்சவங்கள்
வெகு விமரிசையாய்
நடக்குது.

மூன்று
கண்ணுடையானை
மூவாயிரவர்கள்
பூஜிப்பது.

நான்கு
மாட வீதிகள்
நளினமாக
இருக்குது.

ஐந்து
எழுத்து மந்திரம்
ஆகாயத்தில்
ஒலிக்குது.

ஆறு
கால பூஜைகளும்
அர்த்தசாமத்தில்
முடியுது.

ஏழேுழு
ஜென்மத்திலும்
கிடைத்தற்கரிய
பேறு இது.

எட்டு
திக்குகளும்
வேத கோஷத்தில்
நிறையுது.

ஒன்பது
கோள்களும்
ஒருவனையே
பணியுது.

பத்து நாள்
உற்சவமும்
பாங்குடனே
நடக்குது.

சித்ஸபேசா சிவ சிதம்பரம்.

திருச்சிற்றம்பலம் !!!

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

இன்று தில்லையிலே
சூரிய பிரபை வாகனத்தில்
சிவானந்த நாயகி ஸமேத
ஸ்ரீ சோமாஸ்கந்தர் வீதியுலா.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
16.12.2018

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...