மார்கழி
தேவர்களைத்
துதிக்க பிரம்ம
முஹுர்த்த மாதம்
பகவானைப்
பூஜிக்க மிக
உகந்த மாதம்
பீஷ்மர் அருளிய
விஷ்ணு ஸகஸ்ரநாமம்
பிறந்த மாதம்
பாரதப் போரில்
பகவத் கீதை
பிறந்த மாதம்
திருப்பாவையும்
திருவெம்பாவையும்
உதித்த மாதம்
ஆண்டாள்
கண்ணனை
அடைந்த மாதம்
அக்ரஹாரங்களில்
வண்ணக் கோலம்
இடும் மாதம்
சுடச்சுட பொங்கல்
பிரசாத படையல்
கிட்டும் மாதம்
தக்ஷிணாயனத்தின்
கடைசியில் வரும்
தனுர் மாதம்
மாதங்களில் நான்
மார்கழியென மாதவன்
உரைத்த மாதம்.
பெருமாளுக்கு ஏகாதசியும்
பெருமானுக்கு திருவாதிரையும்
அமைந்த மாதம்
மார்கழித் திங்கள்
மதி நிறைந்த நந்நாள்.
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
16.12.18
No comments:
Post a Comment