நடராஜா
நின் சந்நிதியை
சரணடைவேன்
சபாபதியே என்
சங்கடங்கள்
தீர்த்து வைப்பாய்
உமாபதியே.
சர்ப்பத்தை
தரித்திரிக்கும்
சதாசிவமே
சௌபாக்கியம்
நல்கிடுவாய்
சிவானந்தமே.
பாவால் உனை
பூஜிப்பேன்
பரமசிவமே
நாவால் உனை
தினம் துதிப்பேன்
நமச்சிவாயமே.
காலனைக்
கண்டித்த
கலாதரனே
இப் பாலனை
ஆட்கொள்வாய்
ஜடாதரனே.
நம்பி உன்னை
தொழுதிடுவேன்
நடராஜனே இச்
சிறியேனுக்கு
அருள் புரிவாய்
ஸ்ரீ சிதம்பரமே.
சித்ஸபேசா சிவ சிதம்பரம்.
திருச்சிற்றம்பலம் !!!
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
இன்று தில்லையிலே
சந்திர பிரபை வாகனத்தில்
சிவானந்த நாயகி ஸமேத
ஸ்ரீ சோமாஸ்கந்தர் வீதியுலா.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
15.12.2018
No comments:
Post a Comment