குருநாதா
கருவாய் முதலில்
பயணம் தொடங்கி
திருவாய் மலர்ந்து
தந்தையை நாடி
குருவாய் ஒருவரின்
அருளும் பெற்று
தருவாய் வாழ்வில்
வளம் பல கண்டு
எருவாய் முடிவில்
காட்டினையடைவோம்.
குருவருள் பெற்றிட
வளம் பல கிட்டும்
நற்குருவைப் பணிய
நலம் பல எட்டும்..
குரு பிரம்மா
குரு விஷ்ணு
குரு தேவோ
மகேஷ்வரஹ
குரு ஷாக்ஷாத்
பரப் பிரம்மா
தஸ்மை ஸ்ரீ
குரவே நமஹ.
🙏🙏🙏🙏🙏🙏
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
No comments:
Post a Comment