தை பிறந்தது
விடியற்காலையில்
விளக்குகள் ஏற்றி
முப்பது நாட்களும்
கோவில் சென்றோம்.
பனி படர்ந்திருந்த
மார்கழி முடிந்தது
பசுமை துளிர்ந்து
தையும் பிறந்தது.
புதுப் பானையிலே
பொங்கல் இடுவோம்
மஞ்சள் குருத்து வெட்டி
அலங்கரித்து வைப்போம்.
பொங்கி வரும் வேளை
பூரித்து நாம் மகிழ்வோம்
பொங்கலோ பொங்கலென
கூக்குரலிட்டு குதிப்போம்.
ஏலம் முந்திரி சேர்த்த
சர்க்கரைப் பொங்கலும்
நெய் மிளகு கூட்டி வெண்
பொங்கலும் படைப்போம்.
சர்க்கரைவள்ளிக் கிழங்கு
சமையலில் சேர்ப்போம்
சந்தோஷமாய் ஒன்று கூடி
சூரியனைத் துதிப்போம்.
கட்டிக் கரும்பினை
இல்லத்தில் கொணர்ந்து
கதிரவனுக்கு காலையில்
படையலில் சேர்ப்போம்.
தை தையென
தையும் பிறந்தது
ஆனந்தத் தை
அள்ளித் தந்தது.
பொங்கலோ பொங்கல் !!
பொங்கலோ பொங்கல் !!
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
14.01. 2019
No comments:
Post a Comment