மாட்டுப் பொங்கல்
உழவுக்கு கை கொடுக்கும்
காளைக்கு பண்டிகையாம்
உரம் போட்டு ஏர் ஓட்டிடும்
காளைக்கு பண்டிகையாம்
பால் தந்து நமைக் காக்கும்
பசுவுக்கு பண்டிகையாம்
எப்பவுமே மடியும் நிறைந்த
எருமைக்கு பண்டிகையாம்
விளைச்சலுக்கு உதவுகின்ற
மாட்டினங்களின் பண்டிகை
விளைநிலத்தில் உழுவுகின்ற
விவசாயிகளின் பண்டிகை.
மாட்டுப் பொங்கல் ஆம் நம்
நாட்டுப் பொங்கல் இதுவே.
பொங்கலோ பொங்கல்
மாட்டுப் பொங்கல் !!!!!
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
15.01.2019
No comments:
Post a Comment