Search This Blog

Tuesday, January 8, 2019

வாழ்க்கை

வாழ்க்கை

வினாத்தாள் தெரியாமல்
விடையெழுதச் செல்லும்
மாணாக்கரைப் போன்றது
நம் வாழ்க்கை.

நாளை நிஜமென்பது
விடிந்த பின்னரென்று
உணர்த்திச் செல்வது
நம் வாழ்க்கை.

இருந்தும் இல்லாமலும்
இல்லாதும் இருப்பதுமாய்
இ(பி)ன்னல் பல நிறைந்தது
நம் வாழ்க்கை.

மண்ணுக்கும் பொன்னுக்கும்
பெண்ணிற்கும் என்றைக்கும்
போட்டியிட்டு மடிவெதென்பது
நம் வாழ்க்கை.

ஆலிலையின் வழி வந்து
வாழையிலை உணவுண்டு
தென்னையிலை துயிலுவதே
நம் வாழ்க்கை.

ஏதோ நினைத்தேன் எழுதுகிறேன்.

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
09.01.2019

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...