வாழ்க்கை
வினாத்தாள் தெரியாமல்
விடையெழுதச் செல்லும்
மாணாக்கரைப் போன்றது
நம் வாழ்க்கை.
நாளை நிஜமென்பது
விடிந்த பின்னரென்று
உணர்த்திச் செல்வது
நம் வாழ்க்கை.
இருந்தும் இல்லாமலும்
இல்லாதும் இருப்பதுமாய்
இ(பி)ன்னல் பல நிறைந்தது
நம் வாழ்க்கை.
மண்ணுக்கும் பொன்னுக்கும்
பெண்ணிற்கும் என்றைக்கும்
போட்டியிட்டு மடிவெதென்பது
நம் வாழ்க்கை.
ஆலிலையின் வழி வந்து
வாழையிலை உணவுண்டு
தென்னையிலை துயிலுவதே
நம் வாழ்க்கை.
ஏதோ நினைத்தேன் எழுதுகிறேன்.
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
09.01.2019
No comments:
Post a Comment