Search This Blog

Tuesday, January 8, 2019

குருவே சரணம்

குருவே சரணம்

கருணா மூர்த்தியே
கலியுகத் தெய்வமே
காமாக்ஷி ஸ்வரூபமே
காஞ்சி மா முனிவரே

அடியவர்களை ரக்ஷித்து
முழு நூற்றாண்டு வாழ்ந்து
கயிலாயப் பதவி ஏற்று
கால் நூற்றாண்டாகிறது.

கண் கண்ட தெய்வமே
கடவுளை நேரில் எவரும்
கண்டவர் இல்லர் என்பது
கண்ணில்லாதவர் கூற்று.

நடமாடும் தெய்வத்தை
தரிசினம் செய்யுங்கால்
கடவுளையே தரிசிப்பதாக
மனதிலெழும் பக்தி ஊற்று.

மஹா பெரியவாளை
மனதார நினைத்தால்
மனதில் இனம் புரியா
மகிழ்ச்சி நிறையும்.

வாகனம் செலுத்த
எரிபொருள் தேவை
வாழ்க்கை செலுத்த
குருவருள் தேவை.

குருவடி பணிவாம்
திருவடி தொழுவோம்
கவலையும் அகன்றிட
காலடி பற்றுவோம்.

ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர !!

காஞ்சி மஹா ஸ்வாமிகள்
சித்தியடைந்து இன்றோடு
இருபத்தைந்து ஆண்டுகள்
ஆகிறது. 🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
08.01.2019

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...