குருவே சரணம்
கருணா மூர்த்தியே
கலியுகத் தெய்வமே
காமாக்ஷி ஸ்வரூபமே
காஞ்சி மா முனிவரே
அடியவர்களை ரக்ஷித்து
முழு நூற்றாண்டு வாழ்ந்து
கயிலாயப் பதவி ஏற்று
கால் நூற்றாண்டாகிறது.
கண் கண்ட தெய்வமே
கடவுளை நேரில் எவரும்
கண்டவர் இல்லர் என்பது
கண்ணில்லாதவர் கூற்று.
நடமாடும் தெய்வத்தை
தரிசினம் செய்யுங்கால்
கடவுளையே தரிசிப்பதாக
மனதிலெழும் பக்தி ஊற்று.
மஹா பெரியவாளை
மனதார நினைத்தால்
மனதில் இனம் புரியா
மகிழ்ச்சி நிறையும்.
வாகனம் செலுத்த
எரிபொருள் தேவை
வாழ்க்கை செலுத்த
குருவருள் தேவை.
குருவடி பணிவாம்
திருவடி தொழுவோம்
கவலையும் அகன்றிட
காலடி பற்றுவோம்.
ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர !!
காஞ்சி மஹா ஸ்வாமிகள்
சித்தியடைந்து இன்றோடு
இருபத்தைந்து ஆண்டுகள்
ஆகிறது. 🙏🙏🙏🙏🙏🙏🙏
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
08.01.2019
No comments:
Post a Comment