கண்ணா
கூப்பிட்ட குரலுக்கு
வா வா கண்ணா
குழலூதி மயக்கிட
வா வா கண்ணா
கோபியரை கொஞ்சாது
வா வா கண்ணா என்
கூந்தலையே கலைத்திட
வா வா கண்ணா
மயிலிறகை சூடியே
வா வா கண்ணா என்
மார்பினிலே சாய்ந்திட
வா வா கண்ணா
கார்முகில் வண்ணனே
வா வா கண்ணா என்
கைத்தளம் பற்றிடவே
வா வா கண்ணா
இமை மூடி இருக்கையிலே
வா வா கண்ணா எனை
இரு கையால் அணைத்திட
வா வா கண்ணா
கண்ணா கண்ணா 🙏🙏
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
28.01.2019
No comments:
Post a Comment