கண்ணா
குழலாக நான் மாறி
கையில் தவழ வேணும்
கார் குழலாய் உருமாறி
தலை மேலமர வேணும்
மயிலிறகாய் கேசத்தில்
அழகு சேர்க்க வேணும்
பாரிஜாதப் பூவாய் நான்
பக்கம் இருக்க வேணும்
ராதை போல் உன்னோடு
இணைந்திருக்க வேணும்
இப்பேதைக்கு கண்டிப்பாய்
நீ அருள் புரிய வேணும்..
கண்ணா கண்ணா 🙏🙏
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
23.01.2019
No comments:
Post a Comment