வெள்ளிக் கிழமை சிறப்பு கவிதை
காதலியே
கண் மூடி கிடக்கையிலே
கண்ணே உந்தன் நினைப்பு
காலை மாலையும் எப்பவுமே
காதலி உன் மேல் ஈர்ப்பு.
ஓராயிரம் அழகிகளைக்
கண்டாலும் என் மனதில்
ஒருத்தியின் நினைப்பும்
வருவதில்லை.
ஓரக் கண்ணால் தினம்
பார்த்து நகரும் செல்ல
சிறுக்கி உனை மறக்க
முடிவதில்லை.
என்னுடைய காதலை நான்
எப்படித் தான் செல்லுவது
ஏக்கத்தையும் மறைத்தபடி
எத்தனை நாள் வாழுவது ?
அன்பே அருகினில் வருவாயா
ஆசை பொங்க அணைப்பாயா
ஆயிரம் முத்தம் அள்ளித் தந்து
ஆண்டுகள் பல கூடி வாழ்வாயா.
ஒருதலைக் காதல் கவிதை 🌷🌷
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ பாலா
11.01.2019
No comments:
Post a Comment