Search This Blog

Saturday, February 16, 2019

மனது வலிக்கிறது !!

மனது வலிக்கிறது !!

எத்தனை ஆயிரம்
வீரர்களை இன்னும்
இழக்கப் போகிறோம்

கயமைத்தனமாக இப்படி
போர்த் தொடுப்போருக்கு
என்னத் தான் வேண்டும்

பிஞ்சு வயதில் தன்
தந்தையை இழந்து
நிற்கும் சிறார்கள்

கட்டிலை மறந்து தன்
கணவனை காவலுக்கு
அனுப்பிய மனைவிகள்

கனவுகள் பல சுமந்து
தாலாட்டி தன் மகனை
வளர்த்த தாய்மார்கள்

தியாகங்கள் பல செய்து
நம் தாய்த் திருநாட்டை
பாதுகாப்பவர்கள்

திருடர்களிடம் இருந்து
பாதுகாக்க வீட்டிற்குப்
பூட்டு போடுவோம்

தீவிரவாதிகளிடமிருந்து
பாதுகாக்க நாட்டிற்கு
பூட்டு போட முடியுமா ?

முறைத்துப் பார்த்தால்
மூன்றாம் உலகப்போர்
மூளுவது நிச்சயம்

உலக வரைபடத்தையே
பின்னர் திருத்த வேண்டி
இருக்கும்

பொறுமைக்கும் ஒரு
எல்லை உண்டு என்பதை
அண்டை நாடு மறந்ததோ

காஷ்மீரை கையிலெடுத்து
குடைச்சல் கொடுத்திடுவது
நியாயமோ

இந்த இழப்பையும் கூட
அற்ப அரசியலுக்காக 
பயன்படுத்த வேண்டாம்

தேசம் காக்க ஓரணி
திரண்டு நம் ஒற்றுமை
உணர்வைக் காட்டுவோம்

தீவிரவாதத்தை திணிக்கும்
நாட்டை உலகத்தில் இருந்து
விரட்டுவோம்

ஜெய் ஹிந்த் !! வந்தே மாதரம் !!
பாரத் மாதா கீ ஜெய் !!🙏🙏🙏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
16.02.2019

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...