Search This Blog

Saturday, February 9, 2019

யானை யானை

யானை யானை

நடமாடும் பிள்ளையாராம்
நான்முகனின் நற்படைப்பாம்
நாட்டிலும் காட்டிலும் சுற்றும்
நெடியதோர் பாலூட்டியாம்

உருவில் மிகப் பெரியதான
விசித்திரமான  உயிரினமாம்
விளங்காத இவ்விலங்கிற்கு
யானையெனும் பெயராம்

பன்னிரு மாதங்களைப்
பேறு காலமாய்க் கொண்ட
பிரம்மாண்ட பருவம் அது
பிரமிப்பான உருவம் இது

எடையளவு அதிகம் இதன்
நடையளவும் மிக அதிகம்
படையளவு உணவு நீருக்கு
மடையளவு ஆறு குளம்

இலையும் தழையும் தன்
ஆகாரமாக உட்கொண்டு
செரித்த பின்னே கழிவை
விதையாக வெளித்தள்ளும்

ஆண்டிற்கு ஒரு யானை
ஆயிரம் மரம் விதைக்கும்
ஆண்டவனின் படைப்பில்
அற்புதமானதோர் சிறப்பு

ஓட்டமெடுத்தால் அதற்கு
ஈடு கொடுக்க முடியாது
காடுகளின் மூத்த குடி
கரி என்னும் யானையடி

யானைகளின் வழித்தடம்
மணற் குவியலின் பிறப்பிடம்
ஆறு நதிகளின் இருப்பிடம்
கண்டறிவது இதன் சிறப்பிடம்

வாழைத் தோப்பைக் கண்டு
வேழம் விளையாடி மகிழும்
கரும்புத் தோட்டத்தில் புகுந்து
கண்டபடி உண்டு களிக்கும்

குழந்தை குட்டிகளோடு
கூட்டமாக இடம் பெயரும் 
கூட்டுக் குடும்பத்திற்கு
களிறு ஓர் உதாரணம்

ஆஜானுபாகு ஆனால்
அங்குசத்திற்கு அடங்கும்
ஆனைமுகனின் அம்சமாம்
ஆனையைப் போற்றுவோம்.

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
09.02.2019

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...