நந்தியம் பெருமானே
நெடுங்காலமாக நேரில்
உட்கார்ந்து இருக்கிறாய்
உமா மஹேஸ்வரனை
தரிசித்துத் திளைக்கிறாய்
ஒரு காலை ஊன்றியவன்
மறு காலை தூக்குவான்
உலகோரும் உய்யவேண்டி
ஓயாமல் ஆடுவான்
உன்னிரு கொம்பிடையே
தாண்டவமுமாடுவான்
பிரதோஷ காலத்திலே
பக்தர்க்கு அருளுவான்
என்னப்பன் செவி சாய்க்க
விண்ணப்பம் இடுகிறேன்
மறுக்காது மஹேஸனிடம்
தெரிவிக்க விழைகிறேன்
நந்தியம் பெருமானே
போற்றி போற்றி
சிவாய நம ஓம் 🙏🙏🙏🙏
பிரதோஷ கால வணக்கம்.
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
17-02-2019
No comments:
Post a Comment