வெள்ளிக்கிழமை சிறப்பு கவிதை
உறங்காத கண்ணோடு
உள்ளத்தில் கனவோடு
நித்தமுன் நினைவேந்தி
நித்திரை கொள்கிறேன்
மாட்டேன் என மாட்டாய்
மல்லுக்கட்டி நிற்கிறாய்
மத்தாப்பு நினைப்பிலே
மிதக்கவும் விடுகிறாய்
ஊர் மொத்தம் அடங்கிவிட
உற்றாரும் சோர்ந்து விட
உறவாக உனையெண்ணி
உற்சாகம் அடைகிறேன்
எட்டு மணி நேரத்தில்
எத்தனை கற்பனைகள்
ஏமாற்றத்தைத் தருகின்ற
எதிர்ப்பார்ப்பு தருணங்கள்
கிட்டாத ஒன்றைக் கனவில்
கிட்டத்தில் இருத்தி நித்தம்
காதலித்து கண் சொருகும்
காளையர்கள் கூட்டமுண்டு
கண்ணே உனையிழுத்து
கழுத்தருகே தடம் பதித்து
கண நேரம் ஆன பின்னே
கற்கண்டு அமுதுண்பேன்
கனிகளை ஒவ்வொன்றாய்
காலமெல்லாம் சுவைத்து
காமனவன் குதிரையேறி
களியாட்டம் புரிந்திடுவேன்
சொப்பனத்தை மெய்ப்பிக்க
சுந்தரியே வருவாயா உனக்கு
சோர்வடையும் நேரம் வரை
சுவர்க்கலோகம் திறப்பாயா
💐💐💐💐💐💐💐💐💐
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
22.02.2019
No comments:
Post a Comment