Search This Blog

Thursday, February 21, 2019

வெள்ளிக்கிழமை சிறப்பு கவிதை

வெள்ளிக்கிழமை சிறப்பு கவிதை

உறங்காத கண்ணோடு
உள்ளத்தில் கனவோடு
நித்தமுன் நினைவேந்தி
நித்திரை கொள்கிறேன்

மாட்டேன் என மாட்டாய்
மல்லுக்கட்டி நிற்கிறாய்
மத்தாப்பு நினைப்பிலே
மிதக்கவும் விடுகிறாய்

ஊர் மொத்தம் அடங்கிவிட
உற்றாரும் சோர்ந்து விட
உறவாக உனையெண்ணி
உற்சாகம் அடைகிறேன்

எட்டு மணி நேரத்தில்
எத்தனை கற்பனைகள்
ஏமாற்றத்தைத் தருகின்ற
எதிர்ப்பார்ப்பு தருணங்கள்

கிட்டாத ஒன்றைக் கனவில்
கிட்டத்தில் இருத்தி நித்தம்
காதலித்து கண் சொருகும்
காளையர்கள் கூட்டமுண்டு

கண்ணே உனையிழுத்து
கழுத்தருகே தடம் பதித்து
கண நேரம் ஆன பின்னே
கற்கண்டு அமுதுண்பேன்

கனிகளை ஒவ்வொன்றாய்
காலமெல்லாம் சுவைத்து
காமனவன் குதிரையேறி
களியாட்டம் புரிந்திடுவேன்

சொப்பனத்தை மெய்ப்பிக்க
சுந்தரியே வருவாயா உனக்கு
சோர்வடையும் நேரம் வரை
சுவர்க்கலோகம் திறப்பாயா

💐💐💐💐💐💐💐💐💐

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
22.02.2019

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...