Search This Blog

Wednesday, February 20, 2019

உலக தாய் மொழி தினம்

உலக தாய் மொழி தினம்

அடிப்பட்டு அலறும் போது
தன்னிச்சையாய் வருவது
தாய் மொழி மட்டுமென்று
தரணியே அறியும்.

தாயில்லாது உலகில்
சேயில்லை அது போல்
தாய் மொழி கல்லாது
உயர்வில்லை.

மெத்தப் படித்த பெரு
மேதாவியாயினும்
சிந்திக்க உதவுவது
தாய் மொழி மட்டுமே.

கற்பனைக்குகந்த மொழி
கடவுளுக்கு அடுத்த மொழி
கற்ற மொழி பலவாகிலும்
தாய்மொழியே சிறந்த மொழி

பன்மொழிப் புலவரும்
தாய்மொழியில் சிந்தித்து
மொழியாக்கம் புரிவதை
வழக்கமாய்க் கொள்வர்.

அயல் மொழி படிப்பது
அவசியம் என்றாலும்
தாய்மொழி தவிர்ப்பது
தவறான செயலாம்.

தாய் மொழி கற்போம்
தலை நிமிர நடப்போம்

👍👍👍🌹🌹🌹🌷🌷🌷

இன்று உலக தாய் மொழி தினம்

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
21.02.2019

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...