Search This Blog

Thursday, February 28, 2019

வெள்ளிக் கிழமை சிறப்பு கவிதை

வெள்ளிக் கிழமை சிறப்பு கவிதை

பின்னிய கூந்தலுடன்
மேவாயில் கை வெச்சு
வீட்டின் மனை முன்னே
உட்கார்ந்து இருக்குற

கலைந்த கேசத்துடன்
கைநிறைய வளையலோடு
உன் தோழியோடு சேர்ந்து
குந்த வெச்சு இருக்குற

மஞ்சள் தாவணியில்
மச்சானை மயக்குகிற
மொத்தமாக என்னை நீ
குத்தகைக்கு எடுக்குற

பாவாடை தாவணியில்
பளிச்சின்னு இருக்குற
தடாகத்து தாமரையாய்
தங்கமாக மின்னுற

ராத்திரி இருட்டிலும்
வீட்டுக்குள்ள வெளிச்சம்
அது நிலா ஒளிப்பட்ட உன்
முக ஒளியோட சொச்சம்

யாருக்காக இப்படி
காத்து நீயும் கிடக்குற
ஊருக்காக வெக்கப்பட்டு
என்னை ஒதுக்கி வெக்கற.

🌷🌷🌺🌺🌹🌹🌻🌻

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
01.03.2019

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...