வெள்ளிக் கிழமை சிறப்பு கவிதை
பின்னிய கூந்தலுடன்
மேவாயில் கை வெச்சு
வீட்டின் மனை முன்னே
உட்கார்ந்து இருக்குற
கலைந்த கேசத்துடன்
கைநிறைய வளையலோடு
உன் தோழியோடு சேர்ந்து
குந்த வெச்சு இருக்குற
மஞ்சள் தாவணியில்
மச்சானை மயக்குகிற
மொத்தமாக என்னை நீ
குத்தகைக்கு எடுக்குற
பாவாடை தாவணியில்
பளிச்சின்னு இருக்குற
தடாகத்து தாமரையாய்
தங்கமாக மின்னுற
ராத்திரி இருட்டிலும்
வீட்டுக்குள்ள வெளிச்சம்
அது நிலா ஒளிப்பட்ட உன்
முக ஒளியோட சொச்சம்
யாருக்காக இப்படி
காத்து நீயும் கிடக்குற
ஊருக்காக வெக்கப்பட்டு
என்னை ஒதுக்கி வெக்கற.
🌷🌷🌺🌺🌹🌹🌻🌻
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
01.03.2019
No comments:
Post a Comment