Search This Blog

Friday, March 1, 2019

கவிஞன்

மனதில் பட்டதெல்லாம்
மொழியிலே எழுதுவான்
காணும் எவற்றையுமே
கவிநடையிலே எழுதுவான்
அழகைக் கண்டதுமே
அலங்கரித்து எழுதுவான்
கற்பனைக் குதிரையேறி
கனவுலகில் எழுதுவான்
கண்ணனுக்கு எழுதுவான்
மன்னனுக்கு எழுதுவான்
கன்னியரைப் பற்றி அவன்
காலமெல்லாம் எழுதுவான்
காதலும் கடவுளும் தனது
கண்களென எழுதுவான்
நேற்றைக்கும் நாளைக்கும்
நடுவில் நின்றெழுதுவான்

யார் அவன் யார் அவன் ?

எழுத்தை வார்த்தையாக்கி
வார்த்தையால் வரிகளிட்டு
வரிகளுள் வாழ்ந்து காட்டும்
வளமான கவிஞன் ஆவான்.

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
01.03.19

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...