மனதில் பட்டதெல்லாம்
மொழியிலே எழுதுவான்
காணும் எவற்றையுமே
கவிநடையிலே எழுதுவான்
அழகைக் கண்டதுமே
அலங்கரித்து எழுதுவான்
கற்பனைக் குதிரையேறி
கனவுலகில் எழுதுவான்
கண்ணனுக்கு எழுதுவான்
மன்னனுக்கு எழுதுவான்
கன்னியரைப் பற்றி அவன்
காலமெல்லாம் எழுதுவான்
காதலும் கடவுளும் தனது
கண்களென எழுதுவான்
நேற்றைக்கும் நாளைக்கும்
நடுவில் நின்றெழுதுவான்
யார் அவன் யார் அவன் ?
எழுத்தை வார்த்தையாக்கி
வார்த்தையால் வரிகளிட்டு
வரிகளுள் வாழ்ந்து காட்டும்
வளமான கவிஞன் ஆவான்.
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
01.03.19
No comments:
Post a Comment