எனதருமை சங்கரா
தில்லை கூத்தனின்
பதம் பணிந்தாயின்று
திருவள்ளுர் நாயகியை
கரம் பிடித்தாய்.
இந்நாளுக்காக வேண்டி
எந்நாளும் இறைவனை
பணிந்த உனது தாய்க்கு
பணிவாக நன்றி கூறு.
உன்னுடைய ஏற்றத்தை
உற்று நோக்கி மகிழும்
உன் உறவு மக்களுக்கும்
உளமாற நன்றி கூறு.
வானளவு வீட்டைத் தந்து
வர்த்தகமும் பயில்வித்து
எட்டி நிற்கும் தந்தைக்கு
வட்டியோடு நன்றி கூறு.
சீராடி வாழ்வது ஓர் வாழ்க்கை
போராடி வாழ்வது மறு வாழ்க்கை
இரண்டும் கலந்ததோர் வாழ்க்கை
அதுவே உனது என்று கூறு.
இங்கு குழுமியுள்ள கூட்டம்
உனது தந்தையாலே வந்தது
உற்றார் சுற்றார் யாவரும்
உனது பாசத்தாலே சேர்ந்தது.
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும்
தன் மகனைச் சான்றோன் எனக்
கேட்ட தாயாக உன் அன்னைக்கு
நீ வ(ள)ர வேண்டும்.
மகன் தந்தைக்காற்றும் உதவி
இவன் தந்தை எந்நோற்றான்
கொல் லெனும் குறளுக்கேற்ப
நீ திகழ வேண்டும்.
சிவகாமசுந்தரி சமேத
ஸ்ரீசித்ஸபேஸன் அருளால்
சந்தோஷமான வாழ்க்கை
சிறக்க எமது ஆசிகள்.
🌷🌷🌷🌺🌺🌺🌹🌹🌹
அன்புடன் பாலு..
17-03-2019
No comments:
Post a Comment