Search This Blog

Friday, March 15, 2019

சிந்தை

சிந்தை

அறநெறி வழுவா
சிந்தை வேண்டும்
ஆலயம் ஏகிடும்
சிந்தை வேண்டும்

சிவனடி பணியும்
சிந்தை வேண்டும்
சீலம் குறையா நற்
சிந்தை வேண்டும்

பொய்யுரைக்காத
சிந்தை வேண்டும்
மெய்யறி வழுவா
சிந்தை வேண்டும்

நிந்தை கொளாத
சிந்தை வேண்டும்
நேர்மையகலாத
சிந்தை வேண்டும்

பதட்டம் இல்லாத
சிந்தை வேண்டும்
பக்குவம் அடைந்த
சிந்தை வேண்டும்

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
13.03.2019

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...