Search This Blog

Thursday, March 28, 2019

வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்

பிறந்த நாள்
வாழ்த்துக்கள்
மகிழ்ச்சியைத்
தரும் வேளை
வயது ஏறுவதை
எண்ணுகையில்
சின்னதாய் ஒரு
கலக்கமும் எழும்.

எட்டு எட்டாய் பிரித்த
வாழ்க்கையில எந்த
எட்டில் இருக்கிறோம்
தேடி முடிப்பதற்குள்
அடுத்த எட்டிற்குள்
அடியெடுத்து நாம்
வைத்துவிடுகிறோம்

வழுக்கை விழுதலும்
கரு முடி நரைத்தலும்
நெற்றியில் சுருக்கம்
நிறையவே படுதலும்
யோசித்து எண்ணி
செலவுகள் செய்தலும்
வயதின் ஏற்றத்தை
விளங்கிட வைக்கும்

கண்ணாடி பிம்பம்
காட்டிக் கொடுக்கும்
உண்மையை உடனே
உரைத்துச் சொல்லும்
அந்தந்த காலத்தில்
வகுத்திட்ட கடமையை
இறைவன் அருளால்
முடித்திட முயலனும்

வயது ஏறுவதை
உடலோடு நிறுத்தனும்
மனதை என்றென்றும்
இளமையோடு வைக்கனும்
குழந்தையைப் போல
குஷியாக இருக்கனும்
வாழ்க்கையை ரசித்து
வளமாக கழிக்கனும்.

வாழ்த்துக்களுடன் 🌷🌷🌷

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
28.03.2019

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...