சதுர்த்தி ஸ்பெஷல்
தந்தம் உடைத்து
அழகு சந்தத்தில்
பாரதத்தை எழுத
உதவிய கணநாதா
பந்தத்தில் உழன்று
பாவத்தை செய்யும்
மக்கள் யாவரையும்
ரக்ஷிப்பாய் கணநாதா
அருகம்புல் கொண்டு
அர்ச்சித்து தொழுதிட
அகமகிழ்ந்து வரம்
அருள்வாய் கணநாதா
ஆனைமுக சாமியுனை
அனுதினமும் துதித்திட
கவலையெல்லாம்
தீர்ப்பாய் கணநாதா
சங்கடங்கள் தீரவே
சதுர்த்தி நன்நாளில்
சந்நிதி வந்தடைவோம்
கணநாதா
முக்கண் மைந்தனே
மூஞ்சூறு வாகனனே
ஆட்கொண்டருள்வாய்
கணநாதா
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
24-03-2019
No comments:
Post a Comment