Search This Blog

Sunday, March 24, 2019

சதுர்த்தி ஸ்பெஷல்

சதுர்த்தி ஸ்பெஷல்

தந்தம் உடைத்து
அழகு சந்தத்தில்
பாரதத்தை எழுத
உதவிய கணநாதா

பந்தத்தில் உழன்று
பாவத்தை செய்யும்
மக்கள் யாவரையும்
ரக்ஷிப்பாய் கணநாதா

அருகம்புல் கொண்டு
அர்ச்சித்து தொழுதிட
அகமகிழ்ந்து வரம்
அருள்வாய் கணநாதா

ஆனைமுக சாமியுனை
அனுதினமும் துதித்திட
கவலையெல்லாம்
தீர்ப்பாய் கணநாதா

சங்கடங்கள் தீரவே
சதுர்த்தி நன்நாளில்
சந்நிதி வந்தடைவோம்
கணநாதா

முக்கண் மைந்தனே
மூஞ்சூறு வாகனனே
ஆட்கொண்டருள்வாய்
கணநாதா

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
24-03-2019

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...