கவிதைகள் தினம்
எழுத்தை
அழகாக்குவது
வார்த்தை
வார்த்தையை
அழகாக்குவது
வரிகள்
வரிகளை
அழகாக்குவது
பொருள்
பொருளை
அழகாக்குவது
எண்ணம்
எண்ணத்தை
தாங்கிப் பிடிப்பது
எதுவாம் ?
அதுவே
கவிதை / செய்யுள்
எனும் நடையாம்.
உரைநடையை
உரக்கப் படித்தாலும்
எளிதில் பதியாது
கவின்மிகு கவிதையோ
படிப்போர் மனதை விட்டு
என்றும் விலகாது
தீட்டப்பட்ட அழகோவியம்
அதற்கு உயிரைத் தரும்
தெளிவான கவிதை நடை
படிக்க அர்த்தம் தரும்.
கவிதையை காதலிப்போம்
கவிஞனை ஊக்குவிப்போம்
" இன்று கவிதைகள் தினம் "
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
21.03.2019
No comments:
Post a Comment