Search This Blog

Thursday, March 21, 2019

கவிதைகள் தினம்

கவிதைகள் தினம்

எழுத்தை
அழகாக்குவது
வார்த்தை

வார்த்தையை
அழகாக்குவது
வரிகள்

வரிகளை
அழகாக்குவது
பொருள்

பொருளை
அழகாக்குவது
எண்ணம்

எண்ணத்தை
தாங்கிப் பிடிப்பது
எதுவாம் ?

அதுவே
கவிதை / செய்யுள்
எனும் நடையாம்.

உரைநடையை
உரக்கப் படித்தாலும்
எளிதில் பதியாது

கவின்மிகு கவிதையோ
படிப்போர் மனதை விட்டு
என்றும் விலகாது

தீட்டப்பட்ட அழகோவியம்
அதற்கு உயிரைத் தரும்
தெளிவான கவிதை நடை
படிக்க அர்த்தம் தரும்.

கவிதையை காதலிப்போம்
கவிஞனை ஊக்குவிப்போம்

" இன்று கவிதைகள் தினம் "

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
21.03.2019

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...